இணையவழி சுகாதாரத்தை பேணுவதற்கும், ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான அத்தியாவசிய நடைமுறைகள் குறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு கற்பிப்பதை கருத்தரங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சைபர் க்ரைம் அச்சுறுத்தல்கள் மற்றும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மாணவர்களிடையே வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி கருத்தரங்கம் குறித்த தகவல்களை பரப்பி https://www.youtube.com/@UGC_India/featured மற்றும் https://twitter.com/ugc_india என்ற இணையதளங்களில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி கருத்தரங்கு: உயர்கல்வி நிறுவன ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு appeared first on Dinakaran.