பூந்தமல்லியில் திமுக கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம்: நாசர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது

பூந்தமல்லி: பூந்தமல்லியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற(தனி) தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி பார்வையாளர் கிரி ராஜன் எம்பி, பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை வரவேற்றார்.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த் செந்திலை அறிமுகப்படுத்தி ஆவடி சா.மு. நாசர் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். அப்போது, கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்போடு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சார்ந்த திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், திராவிடர் கழகம், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* தேர்தல் பணிமனை திறப்பு
பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாசரத்பேட்டையில் இந்திய கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ச.சசிகாந்த்செந்தில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். மேலும் பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை ஏற்பட்டில் ட்ரங்க் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டது.

The post பூந்தமல்லியில் திமுக கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம்: நாசர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: