இதனிடையே இரட்டை இலை சின்னம் கேட்ட ஓபிஎஸ்சின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுபடவில்லை. அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இப்போது ஓபிஎஸ் அதிமுகவின் அடையாளமே இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பாஜ தலைமை தனக்கு கைகொடுக்கும் என ஓபிஎஸ் நம்பினார். இதனால் தான் அந்த கட்சியை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்தார். ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய போதும், கடைசி நேரத்திலாவது பாஜ உதவும் என இருந்தார். ஆனால் பாஜ எந்த உதவியும் செய்யவில்லை. கட்சியும் கைவிட்டு போய் விட்டது. பாஜவும் கைவிட்டு விட்டது. இப்போது ஓபிஎஸ் நட்டாற்றில் நின்று தவிக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
The post நட்டாற்றில் நிற்கும் ஒத்த சீட்டு ஓபிஎஸ்: கட்சியும் கைவிட்டு போச்சு.. பாஜவும் கைவிட்டுடுச்சு… appeared first on Dinakaran.