அந்தநேரி என்ற ஊரில் மந்திரவாதியை சந்தித்ததாகவும் கூட்டத்தில் தான் பேசும் போது எவராவது இடையில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாக வேண்டும் என கூறி அவரிடம் மந்திரம் வாங்கி வந்ததாகவும் கூறினார். அதனால் கூட்டத்தில் தான் பேசும் போது எவரும் பேசாமல் பேச்சை கவனிக்க வேண்டும் என்றும் பத்தியில் எழுந்து போக கூடாது என்று கூறிய அவர் மீறினால் வீடு போய் சேர்வதற்கு முன் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று நகைச்சுவையோடு கூறினார். நகைச்சுவைக்கே பேர்போன செல்லூர் ராஜு கூட்டத்தை தக்கவைக்க மந்திரவாதியாக மாறி ரத்தம் கக்கி சாவீர்கள் என்று கூறியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளங்களிலும் காமெடியாக பகிரப்பட்டு வருகிறது.
The post கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால் ரத்தம் கக்கி சாவீர்கள்: மதுரை கூட்டத்தில் மந்திரவாதியாக மாறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.