லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

லால்குடி, மார்ச் 28: லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி ஊராட்சிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வாக்காளர்களிடம் 100 சதவீதம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் லால்குடி சட்டமன்ற தொகுதி தாளக்குடி ஊராட்சியில் பேரணி, ரங்கோலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லால்குடி வட்டார இயக்கக மேலாளர் ஸ்டாலின், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனுசியா, ஜூலி ராணி, பைந்தமிழ் தமிழ் செல்வி, கோகிலா, கோமதி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊராட்சிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: