திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் பலி

திருவெறும்பூர், மார்ச் 28: திருவெறும்பூர் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த டீக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெறும்பூர் மலைக்கோவில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மலைகோவில் பகுதியில் திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருவெறும்பூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். அவரது மனைவி பானுமதி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: