பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

பள்ளிபாளையம், மார்ச் 28: குமாரபாளையம் தொகுதியில், பதற்றமான வாக்குசாவடிகளை பார்வையிட்ட மாவட்ட எஸ்பி, தேவைப்பட்டால் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில், 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட இந்த வாக்கு சாவடிகளை, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் நேரில் பார்வையிட்டார். பள்ளிபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவாரங்காடு தொடக்கப்பள்ளி, குமாரபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

வாக்காளர்கள் அச்சுறுத்தல் இன்றி வாக்களிக்க, அதிகாரிகள் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் கேட்டறிந்தார். அப்போது, தேவைப்பட்டால் வாக்கு பதிவின் போது, இந்த வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முன்னதாக, பள்ளிபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆய்வுக்கு வந்த எஸ்பியை, தலைமை ஆசிரியர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.

The post பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: