ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரியில் மாவட்ட ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரியில் மாவட்ட ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் பூபேஸ்குப்தா தலைமை வகித்தார். மண்டல பொது செயலாளர் நாகராசன் வேலை அறிக்கை வாசித்தார். போக்குவரத்து கழக சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் முருகராஜ், ஏஐடியூசி மாநில துணை தலைவர் மணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில், போக்குவரத்து துறையில் தேவைக்கேற்ப காலிப் பணி இடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15வது ஊதியக்குழு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த வரதராஜன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், சம்மேளன துணைத்தலைவர் ரவி, மண்டல துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, மூர்த்தி, வேலாயுதம், நாராயணன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

The post ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: