ஆந்திராவில் என் ஆட்டம் தொடங்கிவிட்டது ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வாலை ஒட்ட நறுக்குவோம்: சந்திரபாபு பிரசாரம்

திருமலை: ஆந்திராவில் எனது ஆட்டம் தொடங்கிவிட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வாலை ஒட்ட நறுக்குவோம் என்று என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பிரஜாகலம் பிரசார யாத்திரையில் நேற்று பலமநேர், மதனப்பள்ளி, நகரி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் சந்திரபாபு புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: நகரியில் அமைச்சராக உள்ள ரோஜா இந்த தொகுதி வளர்ச்சிக்கு என்று எதுவும் செய்யவில்லை. மோசடி மட்டுமே செய்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். நகரியில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். ஆந்திர மாநில நலனுக்காக பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. மாநில நலனுக்காக ஒன்றாகச் செல்கிறோம். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும். யாருக்கும் பயப்பட வேண்டாம். நமது ஆட்டம் தொடங்கிவிட்டது. என்னிடம் பணமும் இல்லை, தனியார் பாதுகாப்பு படை இல்லை. முன்பு அலிபிரியில் ஏழுமலையான் என்னை குண்டு வெடிப்பில் இருந்து காப்பாற்றினார். பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்திற்கு மின்சாரத்தை துண்டித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வாலை நாம் துண்டிப்போம். ஒய்சிபி தலைவர்களுக்கு ஓட்டு கேட்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திராவில் என் ஆட்டம் தொடங்கிவிட்டது ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வாலை ஒட்ட நறுக்குவோம்: சந்திரபாபு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: