திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து

 

திருச்சி, மார்ச் 27: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தொடர்புடைய அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், கலாம் இல்லம், கலாம் நினைவகம் ஆகிய இடங்களை இணைத்து வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்த அரிய வாய்ப்பை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி இத்தலங்களை கண்டுகளிக்கலாம். ஒரு நபருக்கு ரூ.80 கட்டணம். பேருந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஒருமுறை கட்டணம் செலுத்திவிட்டு அந்த பயண அட்டையை வைத்துக் கொண்டு இச்சிறப்பு பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம்.

இந்த வசதியை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவது குறித்து பதாகை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரம் செய்ய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து appeared first on Dinakaran.

Related Stories: