* மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தகுதி பெற்றுள்ளனர். 3வது சுற்றில் கேல் மான்பில்சுடன் மோதிய அல்கராஸ் 6-2, 6-4 என நேர் செட்களில் வென்றார். கிறிஸ்டோபர் யூபேங்க்ஸை எதிர்கொண்ட ஸ்வெரவ் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
* 2020ல் ஓய்வு பெற்ற வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் (31 வயது), தனது முடிவை மாற்றிக்கொண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தயார் என அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆல் ரவுண்டர் இமத் வாசிம் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது முகமது ஆமிரும் பாக். அணிக்கு திரும்ப உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.