புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட கொள்ளையனான கரி என்கின்ற சதீஷ் ரெட்டி (40) ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் புத்தூர் விரைந்து சென்று சதீஷ் ரெட்டியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 708 கிராம் தங்க நகை மற்றும் திருடிய நகைகளை விற்று வைத்திருந்த ரொக்கம் ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சதீஷ் ரெட்டியை காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உட்ளிட்ட 5 மாநிலங்களில் கொள்ளையன் சதீஷ் ரெட்டி மீது சுமார் 80 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் திருடுவதற்கு முன்பு அந்த பகுதியை நோட்டமிட்டது சிசிடிவி பதிவின் மூலம் தெரிய வந்து காவல்துறையின் விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவன் என கண்டறியப்பட்டது.
The post காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது: தனிப்படை போலீசார் அதிரடி; தங்க நகைகள், பணம் பறிமுதல் appeared first on Dinakaran.