இந்த பொதுத் தேர்விற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 13 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 37 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர் உதவியுடன் வாகனம் மூலம் 138 தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திருவள்ளூர் ஆர்எம் ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி அலுவலர் பாலமுருகன், தலைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 478 மாணவர்கள் ஆப்சென்ட் appeared first on Dinakaran.