வாலிபரிடம் பணம் பறித்த 2பேர் கைது

சேலம், மார்ச் 26: சேலம் கிச்சிபாளையம் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (30). இவர் நேற்று முன்தினம் சன்னியாசிகுண்டு மெயின்ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர் சரமாரியாக தாக்கிய நிலையில் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ₹2,000ஐ பறித்து சென்றனர். இதுபற்றி தனசேகர் கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தனசேரிடம் பணத்தை பறித்தது கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரபு (எ)கூழை பிரபு(21), விஜய் (எ)ஓசி விஜய்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபரிடம் பணம் பறித்த 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: