சாம் கரன் 23 ரன், ஜிதேஷ் ஷர்மா 27 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஷஷாங்க் சிங் 21 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் மேக்ஸ்வெல், சிராஜ் தலா 2, யஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வென்றது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 77 ரன் (49 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். தினேஷ் கார்த்தி 28 ரன், லோமர் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபடா, ஹர்ப்ரீத் பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் appeared first on Dinakaran.