மாதவரம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

 

புழல், மார்ச் 25: மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட 45 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் புழல் அடுத்த சூரப்பட்டு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விதிமுறைகள், வாக்கு இயந்திரத்தை கையாளும் வழிமுறைகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மாதவரம் வட்டாட்சியர் வெங்கடாஜலபதி, மாதவரம் மண்டல அலுவலர் திருமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் சின்னதுரை, கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் தினேஷ், மாதவரம் மண்டல மற்றும் மாதவரம் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: