ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

காரியாபட்டி, மார்ச் 24: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த திருச்சுழி தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரம் காரியாபட்டியில் துவங்கப்பட்டது. திமுக மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய முதல் பிரசாரக் கூட்டம் காரியாபட்டியில் நடைபெற்றது. முதல் கூட்டத்திலேயே, மிகப்பெரிய எழுச்சியுடன் திரளாக வந்து எனக்கு வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். தாய்மார்கள், இளைஞர்களும் எழுச்சியுடன் பங்கேற்றதை பார்க்கும் போது திமுக கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: