அரசு பள்ளியில் உலக தண்ணீர் தினம்

திருச்செங்கோடு, மார்ச் 24: திருச்செங்கோடு ஒன்றியம் வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தங்கவேல் தலைமை வகித்து, நீர் மேலாண்மையின் அவசியம் குறித்தும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும் மாணவ -மாணவியரிடையே விளக்கி கூறினார். பள்ளியின் ஆசிரியர்கள் லட்சுமி, விமலா, கவிதா, பிரபு, விஜய் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் நித்யா, கீதா, நிவேதா மற்றும் பள்ளியின் சாரண இயக்கப் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு செய்திருந்தது.

The post அரசு பள்ளியில் உலக தண்ணீர் தினம் appeared first on Dinakaran.

Related Stories: