பைக்கை அபார்ட்மென்டின் கீழ் பகுதியில் நிறுத்தியிருந்தனர். மறுநாள் காலையில் பைக் காணாமல் போயிருந்தது. கண்காணிப்பு காமிராவை பார்த்தபோது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 2 வாலிபர்கள் ஒரு பைக்கில் வருகின்றனர். அதில் ஒருவர் கேட்டை திறந்து வந்து பைக்கை திருடுகிறார். பின்னர் திருடிய பைக்கை மற்றொரு பைக்கில் இருந்தவாறு நகர்த்தி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து அஜீசின் தாயார் சஜிலா கருங்கல் ேபாலீசில் புகார் அளித்தார்.ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் பைக்கை காணவில்லை என்று எழுதி வாங்கிக்கொண்டு ரசீது கொடுத்து அனுப்பி விட்டார்களாம்.
இந்தநிலையில் ஜோசப் கெவின் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தார். அவர் கருங்கல் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை பார்த்தபோது பாலூர் வரை அந்த பைக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இந்த பைக் திருடு போவதற்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பைக்கில் சுற்றித்திரிந்த 2 பேர் தெருவுக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருட முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் விரக்தியில் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
எனவே ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பிரிந்து சென்று வெவ்வேறு பகுதிகளில் பைக்கை திருடுவதாக போலீசார் கருதுகின்றனர். எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு திருட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கருங்கல் பகுதியில் தொடர் பைக் திருட்டு ஒரே கும்பல் கைவரிசை காட்டுவது அம்பலம் appeared first on Dinakaran.