அரசு தொடக்க பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

திருவாடானை, மார்ச் 22: திருவாடானையில் போக்குவரத்து மிகுந்த இடத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிக்கு முன்புறமாக இருந்த வகுப்பறை கட்டிடமும் காம்பவுண்ட் சுவரும் பழுதாகி விட்டதால், இடித்து அகற்றப்பட்டது. தற்போது பின்புறத்தில் மீதம் இருந்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. பழுதான காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு விட்டதால், தற்போது திறந்த வெளியாக உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அருகிலும் அபாயகரமான வளைவு உள்ள இடத்தில் இப்பள்ளி செயல்படுவதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பள்ளிக்கு சாலை இருக்கும் பகுதியில் மட்டுமாவது காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு தொடக்க பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: