திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

 

திருச்சி, மார்ச் 22: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளர் துரை.வைகோ கலந்து கொண்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சின்னப்பா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: