தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். அதில், மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில் பிலோமின் ராஜ் என்பவரின் வீட்டில் நடந்த சோதனையில், ஒரு விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. பிலோமின் ராஜ், ஜோசப் கென்னடி, டேவிட், அன்புராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு வாகன சோதனையில் இரு சக்கர வாகனத்தில் பழமையான அம்மன் சிலை கடத்தி வந்த கோவில்பட்டி ஸ்ரீராம், காரைக்குடியை சேர்ந்த அஜித், விருதுநகரை சேர்ந்த அகமது ஆகியோரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் புலிச்சப்பள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவரின் வீட்டில் 3 பெருமாள் உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: