கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் துவக்கம் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

 

கரூர், மார்ச் 21: இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.19ம்தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளா்கள் மனு தாக்கல் நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான தங்கவேல் கடுமையான தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்தார். அதன் அடிப்படையில்அரசியல் கட்சி பிரமுகர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஐந்து நபர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் பொழுது பத்து நபர்கள் முன்வழிய வேண்டும். மனு தாக்கல் முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களை போலீசார் கடுமையான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதித்தனர். மனு தாக்கல் செய்யும் பொழுது குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் துவக்கம் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: