அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

 

சாத்தூர், மார்ச் 21: சாத்தூரில் அனைத்து கட்சி பிரிதிநிதிகள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது. சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் கால நடைமுறைகள் மற்றும் பின்பற்றக்கூடிய நடத்தை நெறிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூறினர். தேர்தல் பிரச்சார வாகனம், தேர்தல் பிரச்சார மேடை, பிரச்சாரம் செய்யக்கூடிய இடம் குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஒரு செயலி தயார் செய்துள்ளது. அதன் செயல்முறை குறித்தும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, தேர்தல் நேர சிக்கல்களை சுட்டிக் காட்டிய பிரதிநிதிகளுக்கு பதில் அளித்த கோட்டாட்சியர், சிக்கல்களுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: