2017 மற்றும் 2022ல் பாஜக சார்பில் எம்எல்ஏ ஆனார். பரோடா பால் பண்ணை விவகாரத்தில் நடந்த முறைகேடு குறித்து குரல் எழுப்பினார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் மாநில தலைவர்களை, பாஜகவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020ல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தன்னையும் தனது தொகுதியையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். லோக்சபா தேர்தல் நேரத்தில், இதுபோன்ற அறிவிப்பை எம்எல்ஏ கேதன் இனாம்தார் வெளியிட்டுள்ளதால் மாநில தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
The post காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ ராஜினாமா appeared first on Dinakaran.