அப்போது அவர் கூறுகையில், ‘எனது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அதனால் தற்போது கேபினட் அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு, கூடுதலாக பொறுப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பொறுப்பையும் ஒதுக்கி உத்தரவிட்டார்.
The post ஒன்றிய அமைச்சர் ராஜினாமா; கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு.! ஜனாதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.