ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப்பதிவு

மதுரை: ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் குறித்து அவதூறாக பேசியதாக தியாகராஜன் என்பவரின் புகாரின் பேரில் மதுரை சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இரு தரப்பினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ஷோபா பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஷோபா பேசியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரியிருந்தார்.

The post ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: