குளித்தலை, மணப்பாறை சாலையில் சுண்ணாம்பு பூசி விளம்பரங்கள் அழித்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள்

 

குளித்தலை, மார்ச் 20: குளித்தலை, மணப்பாறை சாலையில் சுண்ணாம்பு பூசி நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விளம்பரங்களை அழித்தனர். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் குளித்தலை, சுங்க கேட், மருதூர், குமாரமங்கலம் பாலம், குளித்தலை பெரிய பாலம்,மணத்தட்டை, கோட்டைமேடு, மயிலாடி, சத்தியமங்கலம், அய்யர்மலை, இரும்பூதி பட்டி உள்ளிட்ட அரசு சுவர்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கட்சி விளம்பரங்களை சுண்ணாம்பு அடிக்கும் பணியில் ஈடுபட்டு முற்றிலும் அளித்தனர். மேலும் இப்பணிகள் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பகுதிகளில் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

The post குளித்தலை, மணப்பாறை சாலையில் சுண்ணாம்பு பூசி விளம்பரங்கள் அழித்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: