இளையான்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

 

இளையான்குடி, மார்ச் 19: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 33 மையங்களில் கற்போர் பயின்று வந்தனர். கடந்த செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற 6 மாத காலத்தில் முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிப்படை எண்ணும் எழுத்தும் திறனை அறிவதற்காக தன்னார்வலர்கள் மூலம் வகுப்புகள் நடைபெற்றது.

17.03.24 அன்று நடைபெற்ற தேர்வில் 22 ஆண்கள் மற்றும் 643 பெண்கள் மொத்தம் 665 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.சார்லஸ், டேவிட் ரொசாரியோ, ஜஸ்டின், மேற்பார்வையாளர் பிரான்சிஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டனர்.

 

The post இளையான்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: