விபத்தில் உயிர் சேதம் தடுக்க வேண்டி சிறப்பு பூஜை செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும்

செங்கம், மார்ச் 19: செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்தில் உயிர் சேதத்தை தடுக்க வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வழியாக செல்லும் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்கிரிபாளையம், அந்தனூர் கிராம பகுதியில் தொடர் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ேநற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் எனவும் மேலும் விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய், கோழி உள்ளிட்டவைகளை பலி கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

The post விபத்தில் உயிர் சேதம் தடுக்க வேண்டி சிறப்பு பூஜை செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் appeared first on Dinakaran.

Related Stories: