தோ்தல் பாதுகாப்பு பணி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

 

திருச்சி, மார்ச் 19: பாராளுமன்ற தேர்தல் பணியில் சிறப்பு காவலர்களாக பணிபுரிய முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தோ்தல் பணி என்பது தேசத்திற்கு ஆற்றுகின்ற ஜனநாயக கடமையாகும். தன்னலம் கருதாது தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள் படைவீரா்கள் மீண்டும் தேசப்பணியாற்றிட நல்வாய்ப்பாக கருதி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் படைவீரா்கள், தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்தான தங்களது விருப்பத்தினை ‘துணை இயக்குனர், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், 19ஏ, வார்னா்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சி. என்ற முகவரியில் நோில் அணுகி உரிய விருப்ப விண்ணப்பத்தை பெற்று சமா்ப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தோ்தல் பாதுகாப்பு பணி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: