கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்

 

கரூர், மார்ச் 17: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பங்குனி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு கோயிலில் உள்ள தங்கமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. கொடியேற்று விழாவின் போது பக்தர்கள் ஈசா, பசுபதீஸ்வர கோஷத்துடன் தரிசனம் செய்தனர். வரும் 22 ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு அன்னதானம், சாமி புறப்பாடு மாப்பிள்ளை பெண் வீட்டார் அழைப்பு, சீர்வரிசை வழங்குதல், பக்தர்களுக்கு கல்யாண பசுபதீஸ்வரர் அருள் பாலித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: