காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், மார்ச் 16: விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாஜ அரசை கண்டித்து ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ராமர் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தளவாய் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் செல்வராஜ், விருதுநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவர் சுந்தரம், மாநில என்டியுசி பொதுச்செயலாளர் அண்ணாதுரை,

ராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் லட்சுமணன், முன்னாள் தலைவர் லட்சுமணன், மாநில விவசாய பிரிவு செயலாளர் தங்கவேல், முன்னாள் தலைவர்கள் செட்டியார்பட்டி பேரூராட்சி மணிகண்டன், சேத்தூர் பேரூராட்சி வேலுச்சாமி, மாநில பேச்சாளர் சிவகாசி மோகன் மற்றும் மகிளா காங்கிரஸ், எஸ்சி துறை தொண்டர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட எஸ்சி துறை துணைதலைவர் குருவேந்திரன் நன்றி கூறினார்.

The post காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: