கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

கம்பம், மார்ச் 16: கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் தாங்கினார்.

கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சுமூகமாக நடத்துவது, பொதுக்கூட்ட இடங்கள், தெருமுனை கூட்ட இடங்கள், பிரசார அனுமதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, அமமுக உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: