பாமக செயற்குழு கூட்டம்

திருப்போரூர்: திருப்போரூரில், பாமகவின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஏகாம்பரம், வாசு, மாவட்ட அமைப்பு செயலாளர் தண்டலம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில வன்னியர் சங்க பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்துகொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் இளந்தோப்பு வாசு, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், நகர செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

The post பாமக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: