இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற யாஷிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதனிடையே, வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி நேற்று மாலை கோயிலில் திருமணம் செய்துகொண்டு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் காதல் தம்பதியரின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
The post செங்கல்பட்டு காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் appeared first on Dinakaran.