மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை அறிவித்தார் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை அறிவித்தார் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். திண்டுக்கல், மதுரை வேட்பாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டார்.

35 ஆண்டுகாலம் மார்க்சிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி வருபவர் சச்சிதானந்தம். ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகியாக செயல்பட்டவர் சச்சிதானந்தம். மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசன் எம்.பி. போட்டியிடுகின்றனர். மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்கும் என கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

 

The post மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: