நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

 

உடுமலை, மார்ச் 15: உடுமலையில் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மகளிருக்கு தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்புவை அவதூறாக பேசியதை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், உடுமலை கால்நடை மருத்துவமனை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மகளிரணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி, மகளிர் தொண்டரணி லதா லட்சுமிநாராயணன்,சாஷிதா,உமாராணி, பாரதி, அகிலா, உமாராணி, விஜயலட்சுமி, பானுமதி, பாக்கியலட்சுமி, மும்தாஜ், லதா, திவ்யா, விஜயலட்சுமி, அருக்காணி, மகாலட்சுமி முருகன், கலைவாணி, சுமித்ரா ராணி, ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன்,உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, நகர் மன்ற தலைவர் மத்தீன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார்,தங்கராஜ்,மாவட்ட பொருாளர் முபாரக் அலி, நகர ஒன்றிய நிர்வாகிகள்,கவுன்சிலர்கள்,இளைஞரணி அமைப்பாளர்கள், சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றுஅரசியல் அடிச்சுவடி கூட தெரியாமல், அறிவாளி போல் பேசி வரும் நடிகை குஷ்புவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

The post நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: