குலசை கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா

உடன்குடி, மார்ச் 15: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை, அன்னை முத்தாரம்மன் தேர் கோயில் வளாகத்தை சுற்றி ரதவீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post குலசை கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: