ஆண்டிமடம் அருகே அரசு பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை

 

ஆண்டிமடம், மார்ச் 14: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் சாலக்கரை கிராமத்தில் உள்ள சாலை பொன்னாங்கன்னி நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் புதிய மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாஜி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதி முன்னிலை வைத்தார். ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடைநிலை ஆசிரியர் வேல்மணி ஆண்டறிக்கை படித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு கையெழுத்து, ஓவியம், மாறுவேட போட்டி, கதை சொல்லுதல், நாட்டியம், நாடகம், பாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் சத்தியபாமா பரிசுகளை வழங்கி பேசினார்.

The post ஆண்டிமடம் அருகே அரசு பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: