தமிழ்நாடு காங். நிதிக்குழு உறுப்பினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நியமனம்

ஏரல், மார்ச் 14: தமிழ்நாடு காங். நிதிக்குழுவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜை கடந்த 1ம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற காங்கிரஸ் பொறுப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நியமனம் செய்திருந்தார். இந்நிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிதிக்குழுவிலும் உறுப்பினராக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியமனம் செய்துள்ளார். இதையடுத்து ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post தமிழ்நாடு காங். நிதிக்குழு உறுப்பினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: