சீர்காழி அருகே மங்கைமடத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோலம்

 

சீர்காழி,மார்ச் 13: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமின்றி, 100% வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோலம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவெண்காடு வருவாய் ஆய்வாளர் சசிகலா முன்னிலை வகித்தார். சீர்காழி தேர்தல் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், நடுவராக இருந்து சிறப்பாக வரையப்பட்டிருந்த கோலங்களை தேர்வு செய்து கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ரவி, பிரகாஷ், சுகன்யா, ரோஜா, நிவேதா, உமாமகேஸ்வரி ஆசிரியர் பாலாஜி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

The post சீர்காழி அருகே மங்கைமடத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோலம் appeared first on Dinakaran.

Related Stories: