பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் இனி எந்த தேர்தலும் நடக்காத வகையில் அரசியலமைப்பை மாற்றி அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அதையெல்லாம் ஒன்றிய பாஜ அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், யவத்மால் பகுதி தனக்கு அதிர்ஷ்டமானது என்று கருதும் மோடி ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் இங்கு வருவார். மோடியின் தலைவிதி தான் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். இந்த முறை பாஜ 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜவினர் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜ இந்த முறை தூக்கி எறியப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி தேர்தல் நடக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு appeared first on Dinakaran.