சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒன்றிய அமைச்சருமான கஜேந்திரசிங், பாஜக தேசிய துணைத்தலைவர் பைஜியாந்த் பாண்டே மற்றும் ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எந்தெந்த தொகுதிகளில் யார், யாருக்கு ஒதுக்குவது என ஆலோசிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. 2வது நாளாக இந்த கூட்டம் நேற்று காலையும் பேச்சுவார்த்தை நடந்தது.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் என கடந்த மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுமார் 90 சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதி வேட்பாளர்களை சந்திரபாபு அழைத்து நேற்றிரவு பேசியுள்ளார். கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால் அவர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. இதனால் அவர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு சமாதானப்படுத்தினார்.
The post பாஜவுடன் கூட்டணியால் வாய்ப்பு இழப்பு தெலுங்கு தேசம் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி: சந்திரபாபு நாயுடு சமாதானம் appeared first on Dinakaran.