நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

சென்னை: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான (Election Sector Officer) பயிற்சி வகுப்பு மாவட்டத் தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையில் இன்று (12.03.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்பட வேண்டிய பொருட்கள், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்தும், வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை வட்டாட்சியரிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ளுதல் குறித்தும்,
வாக்குப்பதிவு முந்தைய நாளன்று இரவு அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் வருகை, தேவையான வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பு, வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் (Micro Observer) மற்றும் Web Casting Person வருகையை உறுதி செய்தல், கேமராக்கள் சரியான இடத்தில் சரியான நிலையில் அனைத்து வாக்குப்பதிவு நடைமுறைகளையும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல், வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு அலுவலர்களை தயார்படுத்துதல், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முறையாக செயல்படுகிறதா என்பதை நேரில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று தவறாமல் பார்வையிடுதல் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அதனை கையாளும் வழிமுறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைய நேரிட்டால் என்ன செய்ய வேண்டும், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொருட்களை பெறும் போது கவனிக்க வேண்டிய இனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/துணைஆணையாளர்கள் எம்.பி.அமித், (தெற்கு வட்டாரம்), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்திய வட்டாரம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு வட்டாரம்), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: