வெற்றிவேல் என்பது முருகன் கையில் இருக்கும் இலைபோன்ற ஆலிலை வடிவை உடையது என்பது, வீரவேல் என்பது நீட்டப்பட்ட சாய்சதுர வடிவம் கொண்ட நீட்டப்பட்ட சாய்சதுர வடிவம் கொண்டது என்றும் கூறுகின்றனர். வீரவேல் குத்துவேல் என்றும் அழைக்கப்படுகிறது. கொற்கையில் வெற்றி வேலம்மன் ஆலயம் சிறப்புறத் திகழ்கிறது. இங்கு எட்டுக் கரங்களுடன் சும்பநிசும்ப மர்த்தினியாகக் காளிதேவி வீற்றிருக்கின்றாள். இவள் சந்நதியில் சூலாயுதத்துடன் வேலாயுதத்தையும் வைத்துள்ளனர்.தென்பாண்டி நாட்டில் பல இடங்களில் காளிக்கு வேலாயி, வீராயி என்ற பெயர்கள் வழங்குகின்றன. காளிதேவியைப் போலவே துர்க்கையம்மனும் நீண்ட வெற்றிவேலை ஏந்துகின்றாள். சிலப்பதிகாரம் இதனை வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை என்று குறிக்கிறது. இலங்கையிலுள்ள ஆலயங்கள் பலவற்றில் முருகன் இரண்டு வேலுடன் காட்சி அளிக்கின்றார். இவை வெற்றிவேல் வீர வேல் என்றழைக்கப்படுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலில் மூலவர் இரண்டு வேல்களுடன் காட்சியளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
The post வெற்றிவேல் வீரவேல் முழக்கம் appeared first on Dinakaran.