தேர்வு அதிகாரிகளுக்கான வழிகாட்டி ஆலோசனைக் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 12: நாகர்கோவில் ஜோசப் கான்வெண்டில் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி ஆலோச கூட்டம் நடைபெற்றது. 10 ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோருக்கான வழிகாட்டுதல் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுவாமிநாதன் தலைமையில் நாகர்கோவில் ஜோசப் கான்வென்டில் நடைபெற்றது. இதில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் சுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் பொது தேர்வின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேர்வு மையத்தில் செயல்படும் வழிகாட்டு முறைகளை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தேர்வு அதிகாரிகளுக்கான வழிகாட்டி ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: