கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் வளர்ந்த வண்ணம் உள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பாட்டார். தரவுகளும், சாட்சிகளும் சரியில்லாததால் அவர் விடுதலை ஆகிவிட்டார். விசாரணை சரியாக நடந்திருந்தால் அப்போதே ஜாபர் சாதிக் வெளியில் வந்திருக்க மாட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பாஜ வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் வாதிட்டார். எனவே இதுகுறித்து பேச அதிமுகவிற்கும், பாஜவிற்கும் தகுதி இல்லை. இவ்வாறு தெரிவித்தார்,
The post போதைப்பொருள் கடத்தல் குறித்து பேச அதிமுக, பாஜவுக்கு அருகதை இல்லை: துரை வைகோ அட்டாக் appeared first on Dinakaran.