போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்டச் செயலாளர் மாணிக்கவாசகம், மாவட்டத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மானாமதுரை ஒன்றியத் தலைவர் உக்கிரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடைபெறறும் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயியை சுட்டுக் கொன்ற ஹரியானா அரசு மற்றும் போலீசாரை கண்டித்தும், விவசாயிகளுடைய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரியும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடிய மின்சார சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றக் கோரியும், விவசாயிகள் கடன் முழுவதையும் ரத்து செய்யக் கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது. ரயில்வே ஸ்டேசன் முன்பு கூடியிருந்த 20 விவசாயிகளை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

The post போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: