தேவையில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கட்சியை விட்டு வெளியே அனுப்பியவர் குறித்துப் பேசுகிறார்கள். தகவல் வந்தவுடன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் மீது குற்றப்பத்திரிகை கொடுத்துள்ளார்கள். அவரைப் பதவியிலிருந்து எடுத்தார்களா, ஆளுநரும் அந்த வழக்கிற்கு அனுமதியே கொடுக்கவில்லை, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகே விஜயபாஸ்கர் மீது மட்டுமல்லாமல் ரமணா மீதும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. போதைப் பொருளை ஒழிப்பதற்கு திமுகவைப் போன்று எந்த கட்சியும் நடவடிக்கை எடுத்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post திமுக மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டு சுமத்தினால் சிவில், கிரிமினல் வழக்கு தொடர்வோம்: பி.வில்சன் எம்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.